Tuesday 3 September 2013

கலித்தொகையில் மூலப் படிவங்கள் : யூங்கியத் திறனாய்வு

யூங் பற்றி ஒரு சிலரே அறிந்திருப்பர். ஃப்ராய்ட் போல் இந்த உளவியல் வல்லுநர் பிரபலமாக வில்லை. இருப்பினும் ஃப்ராய்ட் அளவுக்கு உழைத்தவர். ஃப்ராய்டை உலகம் படித்து விமர்சித்தது. ஆனால் என்னை படிக்காமலேயே விமர்சிக்கிறது என்று ஆதங்கப் பட்டார் யூங். இவர் கண்ட கூட்டு நனவிலிக் ( collactive  unconscious ) வலிமையானது. மனிதனின் நனவிலி இருப்பதை ஃப்ராய்ட் எடுத்துக் காட்டினார். அதுபோல் மனித இனத்தின் பொதுவான நனவிலி ஒன்று இருப்பதை யூங் கண்டெடுத்தார். இந்தக் கூட்டு நனவிலியின் ஆதிக்கத்தில் இருந்து எந்த மனிதனும் தப்ப முடியாது. கனவுகள் புனைவுகள் நடப்பு வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளில் கூட்டு நனவிலி தாமாக வெளிப்படும். இது யூங் கண்ட உளவியல் உண்மை.

இந்த அடிப்படையில் இலக்கியங்களில் கூட்டு நனவிலி வெளிப்பாடுகளை எவ்வாறு காண்பது என்கிற திறனாய்வு அணுகுமுறையை இலக்கிய உலகிற்கு யூங் வழங்கிய கொடை 'மூலப் படிவத் திறனாய்வு' (archetypal  criticism )ஆகும். மூலப் படிவங்கள் கூட்டு நனவிலியின் அடங்கல்கள்(contents ) ஆகும். மனித இனம் தோன்றிய நாள் முதல் இனத்தின் ஒட்டுமொத்த அனுபவங்கள் காலங்காலமாய் தொடர உருவானவையே மூலப்படிவங்கள். தாய், தந்தை இதற்கு சான்று. திருடன், மந்திரவாதி, சான்றோர், கொடூரத் தாய், தெய்வீகக் குழந்தை, கற்புக்கரசி, சுயம்,  கடவுள் எனப் பட்டியல் நீளும். இது போல் நூற்றுக் கணக்கில் மூலப்படிவங்கள் நம்முள் பொதிந்து உள்ளன.

இலக்கியங்களில் இவை தாமாக மாற்றுவடிவில் வெளிப்பட்டு  தமது இருப்பை நிருபித்த வண்ணம் உள்ளன. அதன்படி கலித்தொகையில் சங்கப் புலவன் வழியில் வெளியான மூலப்படிவங்கள்  எவை என்பதைப் பற்றிய ஆய்வு இது. காலம் கடந்து அனைத்து இலக்கியங்களுக்கும் யூங் பொருந்துகிறார் என்பதை நிரூபிக்கும் வண்ணம் இந்த ஆய்வு அமைகிறது..

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரித் தமிழ்த் துறை நடத்துகின்ற செம்மொழித் தேசியக் கருத்தரங்கில் 13.09.2013 நாளன்று வழங்கப்படும் ஆய்வு.

No comments:

Post a Comment