Saturday 23 March 2013

ஆளுமை நோக்கில் தமிழர் பண்பாடு

இன்று சாதாரண மனிதன் கூடப் பயன்படுத்தும் கருதாக்கங்களுள் ஆளுமையும் ஒன்று. குறைந்த பட்சம் 'அவன் குணம் சரியில்லை',  'அவன் போக்கு சரியில்லை' என்று விமர்சிப்பது வழக்கம். இவையும் ஆளுமை குறித்த பார்வைதான். ஆளுமையில் தனியர் ஆளுமை தொடங்கிக் குழும ஆளுமை வரை பரவிக் கிடக்கின்றது. ஓர் ஆளை நாம் எப்படி குண அடையாளப் படுத்த முடியுமோ அப்படி ஓர் குழுமத்தையும் பண்பு ரீதியில் அடையாளப் படுத்த முடியும். தனிமனிதரை அவரின் நடத்தைகளைக் கொண்டு ஆளுமையைக் கணக்கிடலாம். அதேபோல் குழும நடத்தைகளான பண்டிகை,திருவிழா,சடங்கு, கொண்டாட்டம் முதலியவற்றைக் கொண்டு அக்குழுமத்தின் ஆளுமைப் பண்பை அளவிடலாம். அதாவது இவற்றை அவர்கள் எப்படிக் கொண்டாடுகின்றனர் இவற்றின் உள் கருத்து என்ன இவற்றால் அக்குழுவினர் பெறும் மன உணர்வு என்ன முதலியவற்றைக் கொண்டு உளவியல் ரீதியில் பகுப்பாய்வு செய்து ஆளுமையைக் கணிக்கலாம். இதைதான் இந்த ஆய்வு முன்வைக்கின்றது. குறிப்பாக, தமிழர்  முக்கியத்துவம் தரும் பொங்கல், தீபாவளி பண்டிகை முன்வைத்துத் தமிழரின் ஆளுமை பகுப்பாய்வு செய்யப் படுகின்றது.

இக்கட்டுரை 'பண்பாட்டு வேர்களைத் தேடி..' நூலில் பதிவாகி உள்ளது.

No comments:

Post a Comment