Sunday 29 July 2012

புதுமைப்பித்தனின் கனவோடை

புதுமைப்பித்தனின் கனவோடை: கபாடபுரம் வழி ஃப்ராய்டிய  விளக்கம்   என்பதுதான் ஆய்வுத்தலைப்பு. அது என்ன கனவோடை ? ஆங்கிலத்தில் surreaism என்கிற இலக்கிய உத்தி உண்டு. அதாவது படைப்பாளி மனத்திலிருந்து தன்னியலாக (automatic) வெளிப்படுகின்ற புனைவுக்கு இவ்வாறு சுட்டுகின்றனர். படைப்பு உத்தியில் இதுவும் ஒன்று. இது நனவோடை என்று சொல்லப்படுகின்ற stream of  consciousness நிலைக்கு எதிர்பதம். நனவோடையில் நனவுநிலையில் இருந்து தன்னியல் புனைவு தோன்றும். சர்ரியலிசம் உத்தியில் நனவிலியில் இருந்து தோன்றும். இது கனவு போன்றது என்பதால் கனவோடை என்று சுட்டுகிறேன்.

கனவோடை உத்தியில் சில தமிழ் படைப்பாளிகள் பங்களிப்புச் செய்துள்ளனர். புதுமைப்பித்தன் முன்னிலையில் வகிக்கிறார். அவரின் சில சிறுகதைகள் கனவோடை உத்தியிலானது. அவற்றுள் ஒன்று கபாடபுரம். இக்கதை முழுமைக்கும் கனவுக் காட்சி போல் விளங்குவதால் ஃப்ராய்டின் கனவுப் பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறேன். சர்ரியலிசம் எனும் உத்தி ஃப்ராய்டின் கனவுக் கோட்பாடு அடிப்படையில் இருந்து வந்தது என்பதை அறியவும். கதையில் கதைத்தலைவன் காணும் கனவு தான் முழுவதும் உள்ளது. எனவே ஃப்ராய்டின் கனவுப் பகுப்பாய்வுக்கு மிகப் பொருத்தமான நிலையில் கதை உள்ளது. இக்கனவில் படைப்பாளியில் நனவிலிக் கூறுகள் பொதிந்துள்ளவற்றை அடையாளம் கண்டு விளக்குகிறது இவ்வாய்வு.

No comments:

Post a Comment