அகில உலகில் கால் பந்துக்கு அடுத்த ஈர்ப்பாக இருக்கும் விளையாட்டு கிரிக்கெட் என்பது பலர் அறிந்த செய்திதான். இந்த விளையாட்டின் மூலக் காரணம் இங்கிலாந்து என்பதும் பொதுவான செய்திதான். ஓர் உண்மை என்னவென்றால் கிரிக்கெட் வரலாற்றுப் படி இந்தியா தான் அதன் பூர்விகம் ஆகும். இந்தியாவில் நாட்டுப்புற விளையாட்டாக விளையாடி வந்த கில்லி கோட்டி (கில்லி தண்டா) விளையாட்டே நவீன கிரிக்கெட்டாக உருமலர்ச்சி பெற்றது. இவ்விரண்டு விளையாட்டின் செயல்முறை அமைப்புகள் இணைநிலையாக இருக்கின்றன என்பதை ஒப்பாய்வு வழியில் அறிய முடிகிறது. இரண்டையும் சிறு வயதிலிருந்தே தீவிரமாக விளையாடி வந்த நான் எனது அனுபவத்தின் வழியில் ஒப்புமைகளைக் கண்டு ஃப்ராய்டியத்தைப் பொருத்திப் பார்த்ததன் விளைவு இக்கட்டுரை.
கிரிக்கெட் விளையாடும்போது ஏற்படும் உணர்வெழுச்சிகள் நனவிலி சார்புடையவை என்பதை நிருபிக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது. குறிப்பாக நனவிலி சாவுனர்ச்சியின் ஆற்றல் மிகு வெளிப்பாடாக கிரிக்கெட் விளங்குகிறது.
கிரிக்கெட் விளையாடும்போது ஏற்படும் உணர்வெழுச்சிகள் நனவிலி சார்புடையவை என்பதை நிருபிக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது. குறிப்பாக நனவிலி சாவுனர்ச்சியின் ஆற்றல் மிகு வெளிப்பாடாக கிரிக்கெட் விளங்குகிறது.
No comments:
Post a Comment