Sunday 26 August 2012

ஈகோவும் அதன் இருமையும் : நாட்டுப்புறக் கதைகள் வழி ஃப்ராய்டிய விளக்கம்

உளவியல் என்பது உலத்தின் இயல்புகள் பற்றியது என்றாலும் அது உண்மையில் ஈகோ பற்றியது ஆகும். ஈகோ தான் உள்ளம். ஈகோவின் பகுதிகளே உள்ளத்தின் பகுதிகள் என்றாகின்றன. ஃப்ராய்ட் உளவியலில் கூட இட்,ஈகோ,சூபர் ஈகோ ஆகிய பிரிவுகள் உள்ளன. அவை ஈகோவின் பகுதிகள் ஆகும். பண்புகள் அடிப்படையில் அவ்வாறு பகுக்கிறார் ஃப்ராய்ட். இவற்றில் இட் என்பது பழமையான ஈகோ. எனவே நனவிலி என்றாகிறது. சூபர் ஈகோ என்பது நடப்பு புறவாழ்வின் சமூக விதிகள் அடங்கிய பகுதியாகும். எனவே இட்டுக்கும் சூபர் ஈகோவுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படும். இம்முரண்பாடு நனவு-நனவிலி முரண்பாடு போல் அமைந்து உளப்போராடங்கள் ஏற்படுகின்றன. இவ்விரண்டையும் சமன்படுத்தும் பணி ஈகோவுக்கு உள்ளது. அப்படிச் சமாதானம் செய்யும்போது சூபர் ஈகோவுக்கு ஆதரவாகவோ அல்லது இட்டுக்கு ஆதரவாகவோ ஈகோ நடந்துக் கொள்ளும். இச்சமயம் இருதலைக் கொள்ளி எறும்பாக ஈகோ தவிக்கும். ஈகோ செயலில் இத்தகு இருமைப் போக்கு நம்மிடையே அவ்வப்போது ஏற்படும்.

ஈகோவின் இருமை செயல்பாட்டால் நாம் இருவித போக்குக்கு ஆளாகிறோம். இந்தப் போக்கு இலக்கியங்களில் கதைகளில் வெளிப்படுவதுண்டு. குறிப்பாக கதா நாயகன் சூபர் ஈகோ சார்புடையவனாகவும் வில்லன் இட் சார்புடையவனாகவும் இருக்கிறான். இதன்படி நாம் ஒரு தருணத்தில் நாயகன் அல்லது நாயகி ஆகவும் இன்னொரு தருணத்தில் வில்லன் அல்லது வில்லி ஆகவும் இருக்கிறோம். கதைப் படைப்புகளில் வரும் நாயகன்-வில்லன் எனும் இருநிலை எதிர்மை (binary opposition ) அப்படைபாளியின் ஈகோவின் இருமைப் போக்கின் வெளிப்பாடுகள் ஆகும். இந்தக் கருத்தாக்கத்தை விளக்க நாட்டுப்புறக் கதைகளை ஆய்வுக்களமாக அமைத்துக் கொள்கிறது இந்த ஆய்வு. இந்த அணுகுமுறைப்படி இராமாயணம். மகாபாரதம் தொடங்கி, சிலப்பதிகாரம்,மணிமேகலை கடந்து இன்றைய நவீனப் படைப்புகள் வரை அணுக வழி உள்ளது. அதற்கான முன்னோட்டமாக இவ்வாய்வு அமைகிறது.

No comments:

Post a Comment