Thursday 6 September 2012

வரலாற்று வரைவியலும் பின்நவினத்துவமும்

 பின்நவினத்துவமும் வரலாறும் பின்னிப் பிணைந்தவை. மனிதச் சிந்தனை வரலாற்றை ஆராய்ந்ததால் விளைந்த விளைவு பின்நவீனத்துவம் ஆகும். இருப்பினும் பின்நவீனத்துவத்தை இலக்கியம் பயன்படுத்திய அளவுக்கு வரலாறு பயன் படுத்தவில்லை. தமிழ் சூழலில்  முற்றிலும் இல்லை. பின்நவீனத்துவம் என்பது ஓர்  அணுகுமுறை. அது வரலாற்றுக்கும் என்று குறிப்பிட்ட அணுகுமுறையைத் தந்துள்ளது. இங்கே வரலாற்றை வரலாறாகப் பார்க்காமல் வரலாற்று வரைவியாலாகப் பார்க்கப்படுகின்றது. அடுத்து, இந்த வரலாற்றுவரைவியலை இலக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. இதன்படி, வரலாறு ஓர் இலக்கியம் ஆகிறது.மனித ஆக்கங்கள் எல்லாவற்றையும் பனுவலாகப் (text ) பார்க்கின்ற அணுகுமுறைதான் வரலாற்றின் மீதும் நிகழ்கின்றது.

வரலாறு ஓர் இலக்கியம் என்பதால் படைப்போனின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப வரலாறு வரையப்படுகின்றது. அதனால் பல உண்மைகள் மறை(று )க்கப்படுகின்றன. எந்த ஒரு வரலாற்றுச் சின்னமும் நிலைத்த வரலாற்று விழுமியம் கொண்டதில்லை.  காலத்திற்கு ஏற்ப மாறுகின்றது. ஒரு சொல்லுக்கான பொருண்மை மாற்றம் நிழல்வதுபோல் இது நடல்லின்றது. தமிழில் நாற்றம் எனும் சொல் ஒருகாலத்தில் வாசனையைக் குறிக்க, தற்போது துர்நாற்றத்தைக் குறித்து நிற்கிறது. இந்த அடிப்படையில் வரலாற்றுச் சின்னங்கள் ஒவ்வொன்றும் குறிப்பானாக அமைந்துள்ளது. ஒருகாலத்தில் சமண மடங்களாக இருந்தவை பிற்காலத்தில் சைவ, வைணவ மடங்கலாயின. இந்த மாற்றம் மொழியின் குறிப்பான்(signifier ) மாற்றம் போன்றது என்று இவ்வாய்வில் நிறுவுகிறேன். இந்தப் பார்வை கொண்டு மதக்கலவரங்களாலும்,அரசியல் மாற்றங்களாலும் நிலைமாற்றம் பெற்ற வரலாற்றுச் சின்னங்களுக்கும் பொருந்தும். காரணம் ஒரு குறிப்பானுக்கான குறிப்பீட்டை (signified ) அதிகாரமே தீர்மானிக்கின்றது. இதுதான் பின்நவீனம் முன்வைக்கும் குறியியல் வாதம். இந்த வாதத்ததின் படி வரலாற்று வரைவியல் என்பது இலக்கியமாகிறது. அதனால்தான் வரலாற்றுப் படிப்பை கலையாகப் பார்க்கப் படுகின்றது. பி ஏ வரலாறு என்போமே அன்றி பி ஏ அறிவியல் என்று கூறுவதில்லை.

No comments:

Post a Comment