Thursday 13 September 2012

நாடுப்புறவியலும் உளப்பகுப்பாய்வு நெறிகளும்

மனித சமூகம் பல கட்டங்களைக் கொண்டது. தற்போது நாம் காணும் நவீன சமூகத்திற்கு  முன்னோடியாக செவ்வியல் சமூகம் நாட்டுப்புறச் சமூகம் தொன்மைச் சமூகம் ஆகியவை உள்ளன.   தொன்ம சமூகத்தை மானிடவியலும் செவ்வியல் சமூகத்தை சமூகவியலும் ஆராய்ந்தன. ஆனால் நாட்டுப்புற வழக்காறுகளைப்  பலகாலம் ஆராய முற்படவில்லை.  எனவே நாட்டுப்புறவியல் எனும் தனித்த துறை தோன்றக் காரணமானது. இது ஒருபுறம் இருக்க நாட்டுப்புற உளவியலை ஆராய வேண்டிய அவசியம் சென்ற நூற்றாண்டில் தோன்றிற்று. அதைத் தோற்றி வித்தவர் சிக்மண்ட் ஃப்ராய்ட்.தொடர்ந்து வளர்த்தெடுத்தவர் காரல் யூங்.

 ஃப்ராய்டிய உளப்பகுப்பாய்வும்  யூங்கிய  உளப்பகுப்பாய்வும் நாட்டுப்புற உளவியலாய்வுக்கான  அடிப்படைகள் ஆகும். இன்றளவும் இவ்விருவரின் கோட்பாடுகளைக் கொண்டுதான் நாட்டுப்புற உளப்பகுப்பாய்வுகள்  நடந்து வருகின்றன.  நாட்டுப்புற வழக்காறுகளை உளப்பகுப்பாய்வு செய்யவேண்டும் எனில் ஃப்ராய்டிய, யூங்கிய அடிப்படைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றுக்கும் மேலாக நாட்டுப்புற உள்ளத்தின் இயல்புகளை அறிந்து கொள்ள வேண்டும்.  எனது இந்த ஆய்வு அதைதான் செய்கிறது.

நாட்டுப்புற உள்ளமானது ஃப்ராய்ட் கூறும் தனியர் நனவிலிக்கும் (personal unconscious) யூங் கூறும் கூட்டு நனவிலிக்கும் (collective unconscious ) இடையில் அமைந்துள்ளது என்பது எனது ஆய்வின் முடிபு. இதை விவரிக்கும் முகமாக இந்த ஆய்வில் நாட்டுப்புற பண்புகள் மற்றும் உளப்பகுப்பாய்வு கொள்கைகள் ஆகியவற்றை பக்கத் துணையாகக் கொண்டுள்ளேன். இதைப் புரிந்துகொண்ட பிறகு நாட்டுப்புற உளப்பகுப்பாய்வு செய்ய அல்லது வாசிக்க எளிதாகும் என்பது என் நம்பிக்கை.

இந்த ஆய்வு நாட்டார் வழக்காற்றியல்   ஜூலை 2006  ஆய்விதழில் பதிவாகி உள்ளது.

No comments:

Post a Comment