Tuesday 9 October 2012

திருப்பத்தூர் பிரம்மேஸ்வரர் கோயில் : வரலாற்றுப் பார்வை

 திருப்பத்தூர் பிரம்மேஸ்வரர் கோயில் பற்றி நான்  ஆய்வு செய்யவேண்டிய அவசியம் என்ன? இரண்டு காரணங்கள்.ஒன்று, சொந்த ஊர் சிறப்பைக் கண்டெடுக்க வேண்டும். இரண்டு, சோழர்கள் வட தமிழகத்திலும்  சிவன் கோயில் எழுப்பினர் என்பதைப் பிறர் அறிய வேண்டும். பொதுவாக வட  தமிழகத்தை விட மத்திய தமிழகத்தில்  சிவன் கோயில்களின் அடர்த்தி குறைவு. திருவண்ணாமலை,காஞ்சிபுரம் கோயில்கள் மட்டும் சிறப்புமிக்கவையாகத் திகழ்கின்றன. தஞ்சை பகுதிகளில் சிவன் கோயில்கள் எண்ணிலடங்காது. காரணம் சோழர்கள் ஆழும்போது தஞ்சை தலைநகரமாக இருந்தது. அதைச்  சுற்றியே அவர்களின் கவனம் இருந்தது. திருப்பத்தூர்  பகுதி சோழ மண்டலத்தின் விளிம்பு நிலை நிலமாகும். இருப்பினும் வட பகுதியில் ஆங்காங்கே சிவன் கோயில் கட்டினர். அவற்றுள் ஒன்று திருப்பத்தூர் பிரம்மேஸ்வரர் கோயில் ஆகும்.

இக்கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. இருப்பினும் வரலாறு கவனிக்க வில்லை. தமிழகத்தில் பல சிவன் கோயில்கள் போல் திருப்பத்தூர் பிரம்மேஸ்வரர் கோயிலுக்கு அகவை அதிகம்.   கல்வெட்டுச் சான்றுப்படி திருப்பத்தூரின் பழைய பெயர் திருப்பேரூர் ஆகும்.  பொதுவில் திரு எனும் அடைமொழி கொண்ட ஊர்கள் சிவன் கோயில் சிறப்பு கொண்டவையாக இருக்கும்.( ஸ்ரீ - வைணவ அடைமொழி யாகும்). இந்த ஊரிலும் கோட்டைக் கோயில் எனும் சிறப்புடைய சிவன் கோயில் உள்ளது. கோட்டை என்பதில் அரண்மனை அரசாங்கம் சார்ந்த சொல் வழக்கு. இதன்படி இவ்வூரில் அரசவை இருந்தது. அந்தப் பகுதியில் சிவன் கோயில் அமைந்திருக்கிறது என்பதை ஊகிக்கலாம். இக்கோயில் சுமார் கி பி 4ஆம் நூற்றாண்டில் கோச்சேங்கனாரால் அமைக்கப் பட்டது. பிறகு பல மன்னர்களால் பராமரிக்கப் பாட்டது. குறிப்பாக உத்தமச் சோழன், இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் ஆகியோரால் கட்டி முடிக்கப் பட்டது.இக்கோயிலின் ஒரு சிறப்பு - கைப்பிடி அளவுடைய சிவலிங்கமாகும். மேலும் ஆதி சங்கரர் கைப்பட வரைந்த மூன்று  ஸ்ரீ சக்கரச் செப்புத் தகடுகளில் ஒன்று இக்கோயிலில் உள்ளது. ( மற்றவை காசியிலும் காஞ்சியிலும் உள்ளன).  பல போர்க்காலங்களில் அடைக்கலமாகவும் இருந்த கோயிலாகும். இப்படி வரலாற்று சிறப்புகளை முன்வைப்பதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.




No comments:

Post a Comment