Saturday 20 October 2012

உளப்பகுப்பு பெண்ணியவாதம் : அணுகுமுறைக்கான அடிப்படைகள்

நடப்பு உலகில் பெண்ணியத்தைப் புறக்கணித்துக் குடும்பமும் நடத்த முடியாது. அந்தளவுக்கு ஆணாதிக்கம் பற்றிப் பெண்கள் சிந்திது வருகின்றனர். சமூகம் தோன்றிய காலத்திலிருந்து பெண்ணடிமை நிகழ்ந்த வண்ணம் உள்ளது. சமூகத்தை ஆணினமே தோற்றிவித்தது என்பதுதான் இதற்குக் காரணம். அதனால் தமது நலனுக்கு ஏற்ப அவன் ஏற்படுத்திக் கொண்டான். ஆண்டான்-அடிமை சமூகத்திலிருந்து பெண்ணடிமை தோன்றிற்று. காரணம் தமக்கு ஓர் அடிமை தேவை என்று ஒவ்வொரு ஆணும் எதிர்பார்த்தான். அதற்கு திருமணம் வழிவகுத்தது. எனவே சமூகத்தின் வேராகிய குடும்பம் ஓர் அடிமை அமைப்பாக இருப்பதால் அதிலிருந்து கிளைத்தெழுந்த சமூக தளங்கள் அனைத்திலும் ஆண்டான்- அடிமை அமைப்பைக் காணமுடிகிறது. இந்த அமைப்பில் பெண்களே அதிகமாக பாதிக்கப் படுகின்றனர்..... வீட்டிலும் வெளியிலும்.

சமூக நோக்கில் இப்படிப்பட்ட வாதங்கள் ஒருபுறம் இருந்தாலும் ஆணாதிக்கத்தால் உளவியல்  ரீதியில் பெண்கள் படும் வேதனை ஆய்வுக்குரியது. அதைப்பற்றி பெண்ணியவாதிகள் கூட தொடக்கத்தில் சிந்திக்கவில்லை. பெண் ஏன்  அடிமை ஆனால் என்கிற கேள்விக்கு சமூக நோக்கில் கண்டறியப்பட்டது. ஆனால் அவள் எப்படி அடிமை ஆக்கப்பட்டாள் என்பதற்கு உளவியல் ரீதியில்தான் காணவேண்டி உள்ளது. இந்த வினாக்கான விடையைக் காண உளப்பகுப்பாய்வு துணை தேவைப்படுகின்றது. அதை முன்னெடுத்தவர் லக்கான் ஆவார். பெண் மட்டும் அடிமை ஆவதற்கு உடலியல் சார் உளவியல் வளர்ச்சி காரணமாக இருப்பதை லக்கான் தமது உளப்பகுப்பு ஆய்வில் கண்டறிந்தார். மனித வரலாறும் உள அமைப்பும் ஒருமித்த நிலையில் கட்டமைந்தன என்பது அவரின் வாதம். எனவே பெண்களில் உள வரலாற்றை அறியாமல் அவர்களின் கீழ்நிலை குறித்த உண்மையைக் கண்டறிய முடியாது.

லக்கானின் இந்த கருத்தாக்கத்தை ஆதாரமாகக் கொண்டு நாட்டுப்புற இலக்கியத்தை உளப்பகுப்பு பெண்ணியவாதம் நோக்கில் இங்கே  ஆய்வு செய்துள்ளேன்.  லக்கான் முன்வைக்கும் குறை (lack ) ஒரு பெண்ணை ஒட்டுமொத்தக் குறையாக ஆக்கப்பட்டதை மேற்படி நாட்டுப்புற இலக்கியம் வழியில் கண்டறிய முடிகிறது. இந்த அணுகுமுறை ஏட்டிலக்கிய ஆய்வுக்கும் பொருந்தும். காரணம் இதுதான் உளப்பகுப்பு பெண்ணியவாத அணுகுமுறைக்கான அடிப்படைகள் ஆகும்.

No comments:

Post a Comment