Tuesday 1 January 2013

சிலப்பதிகாரக் கனவுகள் : ஃப்ராய்டிய விளக்கம்

கனவுக்கும் இலக்கிய ஆக்கத்திற்கும் இடையே பல இணைநிலைகள் இருப்பதாக ஃப்ராய்ட் பல இடங்களில் சுட்டுகிறார். இந்த அடிப்படையில் ஒரு நூறாண்டு காலமாக இலக்கிய உளப்பகுப்பாய்வு நிகழ்ந்து வருகிறது. ஒரு மாற்றத்திற்கு இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கனவுகளைப் பகுப்பாய்வு செய்தால் எப்படி இருக்கும்? இந்த ஆவலில் விளைந்ததுதான் இந்த ஆய்வு. தமிழ் இலக்கியத்தில் சங்கம் முதல் இன்று வரை பல கனவுப் பதிவுகள் உள்ளன. குறிப்பாக காப்பியங்களில் பாத்திரங்கள் காணும் கனவுகள் மிகுதி. அதிலும் குறிப்பாக தீர்க்க தரிசனம் காட்டும் கனவுகள் பல உள்ளன. இவை கனவு நம்பிக்கைகள் தொடர்பானவை.

 தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோவலன் காணும் கனவுகள் பதிவாகி உள்ளன. அவற்றை ஃப்ராய்டிய உளப்பகுப்பாய்வு செய்ய முனைந்ததன் விளைவு இவ்வாய்வு. பொதுவில் கனவு என்றால் நம்மிடையே நினைவுக்கு வருபவர் ஃப்ராய்ட்  ஆவார். அவரின் The Interpretation of Dreams (1900) நூல் மனிதக் கனவுகளை விரிவாக அறிவியல் பூர்வமாக ஆராய்கிறது. கனவுகள் யாவும் அல்லது பெரும்பாலும் நிறைவேறாத வேட்கைகளின் மாற்று வெளிப்பாடு என்பார் ஃப்ராய்ட் . இதை மையமாகக் கொண்டு மேற்படிக் கண்ணகி, கோவலன் கனவுகளை ஆராய்ந்துள்ளேன். கனவுக் குறியீடுகளுக்கு போதுமான ஃப்ராய்டியா விளக்கங்களும் வழங்கியுள்ளேன்.

அவர்கள் கனவுகளில் கோவலன் இறப்பதாக வரும். எனில் இது எப்படி வேட்கைத் தீர்வாகும்.? ஃப்ராய்டிய நோக்கில் இதில் நனவிலி வேட்கை பொதிந்துள்ளது என்பதை முன்வைக்கிறது இந்த ஆய்வு.

No comments:

Post a Comment