Monday 7 January 2013

துறவு = வேட்கை : மணிமேகலை வழி லக்கானிய விளக்கம்

லக்கானுக்கும் இலக்கியத்துக்கும் இடையே உள்ள உறவுகளைப் புரிந்து கொள்வது கடினம். அப்படிப் புரிந்துகொண்டால் பிற அணுகுமுறைகள் எளிதாகிவிடும். ஃப்ராய்ட் அளவுக்கு இலக்கிய உளப்பகுப்பாய்வு உலகில் பிரபலம் ஆகா வில்லை என்றாலும் குறிப்பிடத் தகுந்த தாக்கத்தினை இலக்கிய ஆய்வுலகில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றார் லக்கான். லக்கானிய உளப்பகுப்பாய்வு வழியில் காணும் முடிவுகள் புதுமையாக இருக்கும். அப்படி நான் கண்ட ஒரு முடிவு 'துறவு = வேட்கை'

மணிமேகலை காப்பியத்தில் துறவு என்பது கதைக் கருவாக உள்ளது. துறவை வலியுறுத்தும் நோக்கத்தில் படைக்கபட்டதுதான் இக்காப்பியம். அதுவும் பெண்கள் கூட துறவுக்குத் தகுதி ஆனவர்களே என்பதை பறைசாற்றும் பௌத்த இலக்கியம் மணிமேகலை. ஆசைகளைத் துறப்பது துறவின் நோக்கம். லக்கானியம் நோக்கில் துறவு  என்பதும் ஒரு விதத்தில் வேட்கையே ஆகும். அதாவது ஆன்மீக வாழ்கையை விரும்பி ஏற்பதால் துறவு நிகழ வாய்ப்பாகிறது. இது ஒருபுறம் இருக்க, மணிமேகலைத் துறவு தன்னுடைய விருப்பமாக  இன்றி, தாயின் விருப்பத்தில் விளைந்ததாக சாத்தனார் காட்டுகிறார்.  இது லக்கான் கூறும் தாய் வேட்கை கருத்தாக்கத்துடன் இணக்கமாகிறது. அந்தத் தாய் வேட்கை மணிமேகலை மனதில் எப்படி இயங்குகிறது என்பதை விளக்கும் முகமாக இவ்வாய்வு அமைந்துள்ளது.


No comments:

Post a Comment