Sunday 3 February 2013

புதுமைப்பித்தனின் கபாடபுரம் : மூலப்படிவத் திறனாய்வு

புதுமைப்பித்தன் - தமிழின் நவீன சிறுகதை சிற்பி ஆவார். ஐரோப்பிய இலக்கியத் தாக்கங்களில் அவர் விளைவித்த சிறுகதைகள் இன்றளவும் விழுமியத்தோடு இருப்பது சிறப்பு. பல அணுகுமுறைகளுக்குப்  பொருந்தக்கூடிய கதைகளாக விளங்குவதால் புதுமைப்பித்தனின் கதைகள் உயிர்ப்புடன் உள்ளன.   இங்கே அவர் எழுதிய கபாடபுரம் எனும் சிறுகதையை யூங்கிய மூலப்படிவத் திறனாய்வு செய்துள்ளேன்.

கபாடபுரம் கதைப்படி படைப்பாளியின் தன்னிலை விளக்கமாக இருக்கிறது. அதாவது கதைத் தலைவன் படைப்பாளி ஆகிறான். கதை முழுவதும் 'நான்' அனுபவங்களாக உள்ளன. எனவே இப்பாத்திரத்தில் படைப்பாளியின் உள சார்பு ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகிறது. இந்த துருப்புச் சீட்டைக் கொண்டு யூங்கிய நோக்கில் காணும்போது இக்கதையில் பல மூலப்படிவங்கள் பொதிந்து கிடப்பதைக் காண முடிகிறது. அவற்றுள் முத்தாய்ப்பாக தாய் மூலப் படிவம் வெளிப்பட்டு இருப்பதை யூங்கிய கண் கொண்டு முன்வைக்கிறேன் கூட்டு நனவிலிக்குள் பொதிந்து உள்ள மூலப்படிவங்கள் படைப்புகளில் புனைவேடமிட்டு வெளிப்படும் இயல்பின. இதைப்படி தாய் மூலப்படிவம் படைப்பாளியின் கூட்டு நனவிலியில் இருந்து நனவு படைப்பாக்கத்தில் வெளிப்படும் உத்திகளைக் கொண்டு தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் என்பதை விளக்கி உள்ளேன். இந்த ஆய்வு எனது இரண்டாவது நூலான ஃப்ராய்ட்  யூங் லக்கான் : அறிமுகமும் நெறிமுகமும்  நூலில் ஓர் இயலாக இடம் பெற்றுள்ளது.

ஒரு சந்தர்ப்பத்தில் இதே கதையை ஃப்ராயடிய நோக்கில் ஆய்வு செய்துள்ளேன் என்பது குறிப்பிடத் தக்கது. லக்கானிய அணுகுமுறைக்கும் இக்கதை ஏற்புடையது என்பதை அறியவும். சமயம் வரும்போது அதையும் செய்வேன்.


No comments:

Post a Comment