Sunday 10 February 2013

கிரிக்கெட் நம்மை ஈர்ப்பது ஏன் - ஃப்ராய்டிய விளக்கம்

கிரிக்கெட் நம்மை ஈர்ப்பது ஏன் ? பெருவாரியான இந்தியர்கள் கேட்கின்ற கேள்வி இது. கிரிக்கெட் விளையாடாதவர்கள் கூடக் கிரிக்கெட்டால் ஈர்க்கப் படுகின்றனர். எப்படி என்று அவர்களும் அறியார். நானும் சிறு வயது முதல் கிரிக்கெட் விளையாடி வந்தேன். சுமார் 8 முதல் 22 அகவை வரை. ஏதோ ஓர் ஈர்ப்பு இருந்ததை அனுபவத்தில் உணர்ந்தேன். அவ்வமயம் பல நாட்டுப் புற விளையாட்டுகளையும் கால் பந்து கூடைப் பந்து விளையாட்டுகளையும் விளையாடி வந்தேன். கிரிக்கெட் ஈர்த்தது போல் ஏதும் ஈர்க்க வில்லை. உலக அளவில் கால்பந்துக்கு அடுத்து கிரிக்கெட் மோகம் இருப்பதற்கு உளக் காரணம் இருக்க வேண்டும் என்று பின்னாளில் உணர்ந்தேன். அதை ஆய்வு செய்ய முற்பட்டதில் விளைந்தட்னு இந்த ஆய்வு.

ஒவ்வொரு விளையாட்டிலும் உளவியல் பின்னணி இருக்கும். அதேசமயம் நனவிலி பின்னணி இருக்கும். இது தான் உளப்பகுப்பாய்வு சாரம். இதன் அடிப்படையில் கிரிக்கெட்டிலும் நனவிலிக் கூறு இருக்கின்றது. அந்தக் கூறு கிரிக்கெட்டை விளையாடவும் பார்த்து ரசிக்கவும் செய்கிறது. அதனால்தான் நம்மை  அறியா நிலையில்  கிரிக்கெட் நம்மை ஈர்க்கிறது.

இந்த ஆய்வில் நாட்டுப் புற விளையாட்டுகளுள் ஒன்றான கில்லி கோட்டி விளையாட்டை அமைப்பியல் ரீதியில் கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு பார்த்திருக்கிறேன். தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டின் இயல்புகளைக் கொண்டு உளப்பகுப்பாய்வு செய்துள்ளேன். நனவிலி தளத்தில் இருக்கும் சாவு உணர்ச்சிதான் கிரிக்கெட்டை விளையாடவும் பார்த்து ரசிக்கவும் செய்கிறது என்பதை முடிவாக வைத்திருக்கின்றேன்.

இக்கட்டுரையின் சாரம்  ஒரு ஃப்ராய்டியன்  பார்வையில் தமிழ் நாட்டுப்புற வழக்காறுகள் எனும் எனது நூலில் இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment