லக்கான் என்றதும் அவரைப் பற்றித் தெரிந்தோர்க்கு குறியியல் நினைவுக்கு வரும். குறியியல் என்றதும் சசூர் நினைவுக்கு வருவார். ஆனால் சசூரிடம் இருந்து சற்று விலகி நிற்பவர் லக்கான். இவர் உளப்பகுப்பாய்வு கொண்டு சமூகம், இலக்கியம், பண்பாடு, கலை முதலியவற்றை ஆராய்ந்த சிந்தனையாளர். தனி மனித உணர்வுகள் பற்றியும் சிந்தித்துள்ளார். அவற்றுள் ஒன்று அழகு. மனிதனின் துன்பியல் சார்ந்த உணர்வு அழகியல் ஆகும் என்கிற கோட்பாட்டிலிருந்து அதனை வளர்த்து எடுக்கிறார். மனிதனின் சமூக உறவுகளில் பல அழகியலைச் சார்ந்தவை. அவற்றுள் ஒன்று பரிசு. போட்டிப் பரிசு என்றாலும் அன்பளிப்பு என்றாலும் அப்பொருள் அழகியல் உணர்வுடன் இருப்பதைப் பார்க்கலாம். அப்பரிசை நாம் பெறும்போது நம் மனம் பெரும் இன்பம் அழகியல் இன்பமாகும். எந்த இன்பம் எப்படி செயல் படுகின்றது என்பதை இவ்வாய்வு முன் வைக்கிறது.
சங்க இலக்கியத்தில் ஆற்றுப்படை நூல் வரிசை உண்டு. இதன் அடிப்படை பரிசில் ஆகும். அதாவது கலைஞன் மன்னன் அல்லது வள்ளல் முன் கலை நிகழ்த்திப் பாராட்டு பெரும் விதமாகப் பரிசில் பெறுவான்.இப்பரிசில் அவனது வாழ்வாதாரம் ஆகும். இதில் அழகியல் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவன் நிகழ்த்தும் கலையில் அழகியல் உளது. இந்த அழகியல் இன்பம் பெறுவதால் தான் மன்னன் அக்கலைஞனுக்குப் பரிசில் தருகிறான். இங்கே அழகியல் உணர்வுகள் எப்படித் தம்மைப் பரிமாறிக் கொள்கின்றன என்பதை லக்கான் மொழியில் விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. குறிப்பாக, லக்கான் கூறும் குறியீட்டு முறைமையில் இதன் செயல்பாடு குறித்து விவரிக்கிறது.
சங்க இலக்கியத்தில் ஆற்றுப்படை நூல் வரிசை உண்டு. இதன் அடிப்படை பரிசில் ஆகும். அதாவது கலைஞன் மன்னன் அல்லது வள்ளல் முன் கலை நிகழ்த்திப் பாராட்டு பெரும் விதமாகப் பரிசில் பெறுவான்.இப்பரிசில் அவனது வாழ்வாதாரம் ஆகும். இதில் அழகியல் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவன் நிகழ்த்தும் கலையில் அழகியல் உளது. இந்த அழகியல் இன்பம் பெறுவதால் தான் மன்னன் அக்கலைஞனுக்குப் பரிசில் தருகிறான். இங்கே அழகியல் உணர்வுகள் எப்படித் தம்மைப் பரிமாறிக் கொள்கின்றன என்பதை லக்கான் மொழியில் விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. குறிப்பாக, லக்கான் கூறும் குறியீட்டு முறைமையில் இதன் செயல்பாடு குறித்து விவரிக்கிறது.
No comments:
Post a Comment