அழகியல் என்பது தத்துவக் கோட்பாட்டில் தொடங்கி இலக்கியத் திறனாய்வு வழியில் வளர்ந்து வரும் கருத்தியல் ஆகும். கிரேக்க தத்துவவாதி அரிஸ்டாட்டில் கூடக் கவிதையியல் பற்றிப் பேசும்போது அழகியல் பார்வையில்தான் விவரிக்கிறார். நாம் ஏன் இலக்கியத்தை ரசிக்கிறோம்? இலக்கியத்தில் குறிப்பாக கவிதை தரும் இன்பத்திற்கு காரணம் என்ன .. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை அழகியல் இன்பம் மாறாதிருப்பதேன் .. இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எங்கே சங்க இலக்கிய உத்திகளுள் முக்கிய இரண்டு உத்திகளான உள்ளுறை இறைச்சி ஆகியவை ஃப்ராய்டிய அழகியல் கோட்பாடு கொண்டு அலசப் படுகின்றன.
இவ்விரண்டும் குறிப்புப் பொருள் சார்ந்தவை. அதாவது மறைபொருள் கொண்டவை. மறைபொருள் என்பதும் அதன் இயல்பில் நனவிலிச் சார்பு இருக்கும். இந்தக் கருதுகோள் கொண்டு சில உள்ளுறை இறைச்சிப் பாடல்கள் வழியில் ஃப்ராய்டிய விளக்கம் கொடுத்துளேன். அதாவது மறைபொருள் தரும் இன்பம் நனவிலி இன்பமாகும் என்பது எனது முடிவு. இந்த ஆய்வு எனது தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் அழகியல் இணைநிலைகள் எனும் நூலில் ஓர் இயலாக இடம்பெற்றுள்ளது.
இவ்விரண்டும் குறிப்புப் பொருள் சார்ந்தவை. அதாவது மறைபொருள் கொண்டவை. மறைபொருள் என்பதும் அதன் இயல்பில் நனவிலிச் சார்பு இருக்கும். இந்தக் கருதுகோள் கொண்டு சில உள்ளுறை இறைச்சிப் பாடல்கள் வழியில் ஃப்ராய்டிய விளக்கம் கொடுத்துளேன். அதாவது மறைபொருள் தரும் இன்பம் நனவிலி இன்பமாகும் என்பது எனது முடிவு. இந்த ஆய்வு எனது தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் அழகியல் இணைநிலைகள் எனும் நூலில் ஓர் இயலாக இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment